• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறு தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட புத்துயிரூட்டல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- சிறிய அளவிலான தேயிலை மற்றும் இறப்பர் காணிகளை மீள பயிர்ச் செய்தல், புதிய பயிர்ச் செய்கைகளாக அபிவிருத்தி செய்தல், நிலைபேறுடைய மற்றும் இலாபகரமான தொழில்முயற்சிகளை கட்டியெழுப்புவதன் மூலம் சிறிய அளவிலான தேயிலை மற்றும் இறப்பர் பயிர் செய்வோரின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தேயிலை மற்றும் இறப்பர் காணிகளில் பல் பயிரிடல், பயனாளிகளின் ஆற்றலை அபிவிருத்தி செய்தல், வர்த்தக ஆற்றல்களை மேம்படுத்துதல், கிராமிய நிதி மற்றும் கடன் வழங்கல் சேவைகளை விருத்தி செய்வதன் மூலம் பயனாளிகளின் வறுமை நிலையை இல்லாதொழித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள சிறு தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட புத்துயிரூட்டல் கருத்திட்டமானது கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியத்தினதும், இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்க வங்கிகள் மற்றும் தனியார்துறையினதும் அதேபோன்று பயனாளிகளினதும் பங்களிப்புடன் 65.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மொத்த செலவில் 2016 - 2021 ஆம் ஆண்டுவரை ஆறு (06) வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.