2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மேல் மாகாண மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொரிய குடியரசின் காணி, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சுடனான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கையின் பொருளாதார போக்கினை துரிதப்படுத்துவதற்கான முன்னுரிமை திறமுறையொன்றாக மேல் மாகாண மாநகரம் திட்டமிடப்படுகின்றதோடு, அதன் கீழ் செய்யப்படவுள்ள பல கருத்திட்டங்களுக்குரிய துறைகளில் சருவதேச நிபுணர்களின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக ஒத்துழைப்புக்கான முறையான கட்டமைப்பொன்றைத் தயாரித்தல், இரு நாடுகளினதும் பரஸ்பர நலனுக்காக பங்களிப்பு நல்கக்கூடிய முயற்சிகளுக்கு வசதியளித்தல், விரிவான திட்டமிடல் மூலம் மேல் மாகாண மாநகர கருத்திட்டத்தின் பல துறைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல் போன்ற நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு மேல் மாகாண மாநகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்தாசை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கும் கொரிய குடியரசின் காணி, உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|