2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்லுதல் - பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமான முறைப்பாடுகளை பொறுப்பேற்றல் மற்றும் அவை சம்பந்தமான புலனாய்வுகளுக்கு வசதிகளை வழங்குதல் என்பன பொருட்டு ஊழல் தடுப்பு குழு செயலகமானது அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. தற்போது நாட்டிலுள்ள ஊழல் தடுப்பு நிறுவன கட்டமைப்பு தொடர்பிலான மீளமைப்பு கவனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதோடு, ஐக்கிய இராச்சியத்தின் பாரிய முறைக்கேடுகள் பற்றிய அலுவலகத்திற்குச் சமமான முழுமையான அதிகாரம் கொண்ட பாரிய முறைக்கேடுகள் பற்றிய அலுவலகமொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஊழல் தடுப்பு தொடர்பில் புதிய நிறுவன கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தும் வரை ஊழல் தடுப்பு குழு செயலகத்தின் தொழிற்பாட்டுப் பணிகளை உள்ளவாறே தொடர்ந்தும் பேணும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |