• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக திரண்டுள்ள சேதமடைந்த வீட்டு பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுதல்
- 2016 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களில் குவிந்திருந்த கழிவுகளை அப்புறப்படுத்துதலானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்காக குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் சேமிப்பினைப் பயன்படுத்தி தரைப்படையின் கோரிக்கையின் பேரில் அண்மையில் கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக திரண்டுள்ள சேதமடைந்த வீட்டு பொருட்களையும் கழிவுகளையும் மிக விரைவாக அகற்றுவதற்காக இருபது (20) ரிப்பர் வண்டிகளை ஒரு (01) வார காலத்திற்கு ஈடுபடுத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.