• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்த நிவாரணம் வழங்குதல் மற்றும் பழைய நிலைக்கு மீண்டு கொண்டு வருதல் என்பவற்றுக்கான நிதி உதவிகள்
- 2016 மே மாதம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உள்நாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதிக் கொடைகளை வைப்புச் செய்வதற்காக மூன்று (03) வங்கிக் கணக்குகளும் பல்வேறுபட்ட வௌிநாட்டு நாணயங்களில் கிடைக்கப்பெறும் வௌிநாட்டு நன்கொடையாளர்களின் கொடைகளைப் பொறுப்பேற்பதற்கு ஐந்து (05) கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் இந்தக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும் நிதி உரிய நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் திறைசேரியின் பிரதிச் செயலாளரின் பெயரில் இலங்கை மத்திய வங்கியில் திறக்கப்பட்டுள்ள கணக்கில் நாளாந்தம் வரவு வைக்கப்படுகின்றதெனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.