2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை மாவட்டத்தில் பிராந்திய / உள்நாட்டு விமானநிலையமொன்றைத் தாபித்தல் - ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்கள் தவிர இலங்கையின் ஏனைய சகல மாகாணங்களிலும் பிராந்திய / உள்நாட்டு விமான நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து பதுளைக்கு வாகனமொன்றில் பயணிப்பதற்கு ஆகக்குறைந்தது ஆறு (06) மணித்தியாலங்களுக்கு மேல் செல்வதோடு, விமானத்தின் மூலம் இந்தக்காலம் 25 நிமிடங்களுக்கு வரையறுக்க முடியும் என்பதோடு, பிரதேசத்தின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி பொருளாதார பயிர்ச்செய்கையை விருத்தி செய்வதற்கும் பதுளை மாவட்டத்தில் விமான நிலையமொன்றைத் தாபிப்பதன் மூலம் நன்மை கிடைக்கும். இதற்கமைவாக பதுளை மாவட்டத்தின் பண்டாரவெல பிரதேசத்தில் பிராந்திய / உள்நாட்டு விமானநிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |