2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய மற்றும் பசுபிக் வலய சட்ட அமுலாக்கல் தேசிய நிறுவனங்களின் தலைவர்களினது சந்திப்பு - உலகின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அது சம்பந்தமான புலனாய்வுப் பணிகளை மேற்கொள்ளும் முதன்மையானதும் முன்னுரிமை பெற்றதுமான அமைப்பொன்றாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பற்றிய பணியகம் செயற்படுவதோடு, சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு சம்பந்தமான சமவாயங்களின் நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்தல் போதைப்பொருள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும் ஆசிய மற்றும் ஆசிய பசுபிக் வலய சட்ட அமுலாக்கல் தேசிய நிறுவனங்களின் தலைவர்களின் மாநாட்டில் வலயத்தினுள் காணக்கிடைக்கும் போதைப்பொருள் தொடர்பிலான புதிய போக்கும் அது சம்பந்தமாக பிணக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படுவ தோடு, போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கருத்துக்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெறுகின்றது. இந்த மாநாடு 2016 ஆம் ஆண்டில் ஒக்ரோபர் 22 / 28 வரை கொழும்பில் நடாத்துவதற்கு உரிய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |