2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நகர பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளை கூடிய இடவசதியுடனான இடங்களுக்கு கொண்டு செல்தல் - சிறைச்சாலைகளை சீர்திருத்த நிலையங்களாக மாற்றும் பொருட்டு சிறைச்சாலைகளில் துரித மீளமைப்புகளைச் செய்யவேண்டிய தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. இதன் கீழ் நெரிசல் கூடிய நகர பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளை சனத்தொகை குறைந்த பிரதேசங்களுக்குக் கொண்டு செல்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக்கமைய கொழும்பு, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய அடிப்படை திட்டங்களைத் தீட்டுவதற்கும் மதியுரைப் பணிகளைச் செய்வதற்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிருமாணிப்பு நிறுவனங்களுக்குக் கையளிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |