• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் தீவுகளுக்கும் இடையில் பாதுகாப்பான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் இறங்குதுறை வசதிகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்தல்
- யாழ்ப்பாண குடாநாட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள நெடுந்தீவு மற்றும் நயினாதீவு உட்பட தீவுகளில் வசிக்கும் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக கப்பல் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துகின்றனர். இதனைவிட மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளும்கூட கப்பல் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆயினும் போதுமானளவு அத்துடன் பாதுகாப்பான கப்பல் சேவை இல்லாமை, இறங்குதுறை வசதிகள் குறைந்த தரத்திலுள்ளமை, தற்போதுள்ள வௌிச்சவீடு திருத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளமை போன்ற பிரச்சினைகள் காரணமாக கரையோரப் பயணிகளின் போக்குவத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றுவழியாக வர்த்தக கப்பல் பணிப்பாளர் அதிபதியின் ஊடாக கரையோரப் பயணிகள் போக்குவத்துப் பணிகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குறுத்துவதற்கும் கப்பல் கட்டளைச் சட்டத்திற்குப் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.