• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலஸ்முல்ல வாராந்த சந்தையின் நிருமாணிப்பு பணிகளை மீள ஆரம்பித்தல்
- வலஸ்முல்ல வாராந்த சந்தையின் நிருமாணிப்பு பணிகள் அத்திவாரம் வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, நிதி பெற்றுக்கொள்ளும் பிரச்சினையின் மீது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் நிருமாணிப்புப் பணிகளின் மீதி வேலைகளை 50 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவின் கீழ், ஆரம்ப நிருமாணிப்புப் பணிகளை மேற்கொண்ட இலங்கைத் தரைப்படையின் நிருமாணிப்புப் பிரிவின் ஒத்தாசையுடன் செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.