• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டட நிருமாணிப்புக் கருத்திட்டம் - (மதியுரைக் கம்பனிகளும் உரிய கொடுப்பனவுகளும் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தல்)
- அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டட நிருமாணிப்புக் கருத்திட்டம் சார்பில் மதியுரைக் கம்பனிகளைத் தெரிவுசெய்தல், இந்த கம்பனிகளுக்கு உரிய கொடுப்பனவுகளைச் செய்தல் சம்பந்தமாக அமைச்சரவைக்கு செம்மையான தகவல்களை வழங்காது செய்யப்பட்டுள்ளமை இது சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் நிருமாணிப்புப் பணிகளுக்கு மதியுரைச் சேவையைப் பெற்றுக்கொண்ட தனியார் கம்பனியின் சேவையை இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இதன் பின்னர் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கும் இந்தக் கம்பனிக்கு செலுத்தப்பட்டுள்ள மதியுரைச் சேவைக் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.