2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மூலதன இலாப வரி முறையினை மீள அறிமுகப்படுத்துதல் - கடந்த பல தசாப்த காலமாக நாட்டின் தனியார் மூலதனத்தில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசாங்க நிதியங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி போன்ற பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் என்பன பங்களிப்பு நல்கியுள்ளதோடு, முக்கியமாக இந்த கருத்திட்டங்களினால் காணிகளின் பெறுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக வரி செலுத்தாது பாரிய அளவில் மூலதன இலாபத்தை ஈட்டுவதற்கு காணி உரிமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் விளைவாக வருமானம் பகிர்ந்து செல்வதில் முரண்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை சீர்செய்யும் பொருட்டு மூலதன இலாப வரியினை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழு உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இதற்கமைவாக புதிய மூலதன இலாப வரிக் கட்டமைப்பொன்றை வரையும் பொருட்டு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் தலைவராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |