• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 18 சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை வழங்குதல்
- கிராமிய பிரதேசங்களிலும் அவற்றுக்கு அண்மையிலும் உள்ள பிரதான சமூக - பொருளாதார நிலையங்களுக்குமிடையிலான நுழைவுப் பாதைகளை விருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்கீழ் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள சகல மாவட்டங்களையும் களுத்துறை மாவட்டத்தையும் தழுவும் விதத்தில் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்குமாக நடைமுறைப் படுத்தப்படவுள்ள 18 வீதிப் பகுதிகளின் நிருமாணிப்புகளுக்குரிய 18 சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.