• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை, களனி, கொழும்பு, யாழ்ப்பாணம், ரஜரட்ட, கட்புல மற்றும் ஆற்றுகை கலைகள் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களினதும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கமத்தொழில் தொழினுட்ப மற்றும் கிராமிய விஞ்ஞான நிறுவனத்தினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களில் நிலவும் இட மற்றும் ஏனைய வசதிகளை விருத்தி செய்து தற்போது கல்வி கற்கும் அத்துடன் எதிர்காலத்தில் தொழினுட்ப பட்டம் உட்பட ஏனையப் பட்டப்பாட நெறிகளை கற்பதற்கு எதிர்பார்க்கும் மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு அரசாங்கத்தினால் உயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில் தொழினுட்ப பட்டப்பாட நெறி கற்பதற்காக 1,825 மாணவர்களை உள்வாங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, 2017 ஆம் ஆண்டிலிருந்து எதிர்வரும் காலங்களில் 5 சதவீதம் கொண்ட பொதுவான வளர்ச்சி வேகத்துடன் மாணவர்களை உள்வாங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது நடவடிக்கை எடுத்துள்ளது அதேபோன்று எதிர்காலத்தில் இந்த பாடநெறி ஏனைய பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொருளாதாரத்தில் நிலவும் அபிவிருத்தி தேவைகளுக்கும் சருவதேச தொழிற் சந்தைக்கும் ஏற்ற தொழில்சார் ரீதியில் திறமை மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டில் 484 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவிலும் 2017 ஆம் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே 3,388 மில்லியன் ரூபாவையும் 1,074 மில்லியன் ரூபாவையும் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் 8 பல்கலைக்கழகங்களில் கட்டடங்கள், கனணிப் பிரிவுகள், நூலகங்கள், ஆராச்சிக் கட்டடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.