2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புத்தளம் பாலாவிப் பிரதேசத்தில் உள்ள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் - சருவதேச விமான நிலையங்களுடன் முழுநாட்டையும் இணைக்கும் வினைத்திறன் மிக்க உள்ளக விமான போக்குவரத்து முறைமையொன்று இருப்பது நாட்டிற்கு முக்கியமானதாகும். கட்டுநாயக்கா மற்றும் மத்தளையிலுள்ள இலங்கைக்குச் சொந்தமான இரண்டு சருவதேச விமான நிலையங்களுக்கு மேலதிகமாக 9 மாகாணங்களில் 7 மாகாணங்களைத் தழுவும் விதத்தில் அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, ஹிங்குரக்கொட, பளாலி, இரனைமடு, கொக்கல, கட்டுகுறுந்த, பாலாவி, இரத்மலானை, சீகிரியா, திருகோணமலை, வீரவில மற்றும் வவுனியா போன்ற இடங்களில் பல்வேறுபட்ட அளவுகளில் உள்நாட்டில் 14 விமான நிலையங்கள் உள்ளன. பதுளை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 3 மாவட்டங்களில் முக்கியமாக இந்த மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக அரச - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியின் கீழ் மூன்று புதிய உள்ளக விமானநிலையங்களை தாபிப்பதற்கு 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக, சுற்றுலா மையமாக மாறிவரும் கல்பிட்டிய பிரதேசத்தில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் 850 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் தற்போது பயன்படுத்தாதுள்ள பாலாவி விமான நிலையத்தை மேலும் 20 ஹெக்டயார் காணியினைச் சேர்த்து அபிவிருத்தி செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|