2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
94 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுதல் - மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்காக மக்களினால் கட்டியெழுப்பப்பட்ட தொழில்முயற்சியொன்றாக கூட்டுறவு தொழிலை அறிமுகப்படுத்தலாம். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இந்த தொழிலின் சருவதேச தின கொண்டாட்டங்கள் 1975 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் சருவதேச கூட்டுறவுத் தினமானது யூலை மாதம் 02 ஆம் திகதியன்றில் நடாத்தப்படவுள்ளதோடு, அதற்கமைவாக 2016 யூன் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து யூலை மாதம் 01 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கூட்டுறவு வாரமொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் 2016 யூலை மாதம் 02 ஆம் திகதியன்றில் நடாத்தப்படவுள்ள கூட்டுறவு தினம் கூட்டுறவாளர்களுடன் இணைந்து கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் கொண்டாடுவதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |