• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் யுக்ரேனுக்கும் இடையில் வேற்றரசுக்கு ஒப்படைக்கும் உடன்படிக்கை
- குற்றவாளிகளை அவர்களுடைய தாய்நாட்டிற்கு மீள ஒப்படைப்பது சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் யுக்ரேனுடன் உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு யுக்ரேனில் தஞ்சம் கோரியுள்ள ஆட்களையும்கூட மீள ஒப்படைக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் வாய்ப்பு இதன் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும்.