2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்கு அதிவேகப்பாதை நீடிப்புக் கருத்திட்டத்தின் சிவில் வேலைகளுக்கான நிருமாணிப்பு மேற்பார்வை மற்றும் வடிவமைப்பு ஆய்வு தொடர்பிலான மதியுரைச் சேவை - தெற்கு அதிவேகப்பாதை நீடிப்புக் கருத்திட்டம் நான்கு (04) பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் முழு நீளம் 96 கிலோமீற்றர்களாவதோடு, இந்தக் கருத்திட்டத்தின் முதலாவது பகுதி மாத்தரையிலிருந்து பெலியத்தை வரையும் (30 கி.மீ), இரண்டாவது பகுதி பெலியத்தையிலிருந்து வெட்டிய வரையும் (26 கி.மீ), மூன்றாவது பகுதி வெட்டியவிலிருந்து அந்தரவெவ வரையும் (15 கி.மீ) நான்காவது பகுதி மத்தளயிலிருந்து அந்தரவெவ ஊடாக அம்பாந்தோட்டை வரையும் (25 கி.மீ) செல்கின்றது. இந்தக் கருத்திட்டத்தின் சகல பகுதிகளுக்குமான நான்கு (04) சிவில் வேலை ஒப்பந்தங்களுக்கான நிதியங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியுடன் ஏற்கனவே அரசாங்கம் நான்கு உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளதோடு, கருத்திட்டத்தின் சிவில் வேலைகளின் மேற்பார்வை மற்றும் வடிவமைப்பு ஆய்வு தொடர்பிலான மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி வழங்கும் சீன அரசாங்கத்துடன் காலக்கட்டமைப்பு உடன்படிக்கையொன்றையும் சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றையும் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |