2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் காவறையுடனான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல் - வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திலுள்ள முக்கிய வைத்தியசாலையொன்றான சிலாபம் பொது வைத்தியசாலை சிலாபம் அதேபோன்று அதற்கண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பணிகளை முறையாக நடாத்திச் செல்வதற்காக அங்கு தற்போதுள்ள மிகப் பழமைவாய்ந்த சத்திரசிகிச்சைக் கட்டடத்தை உடைத்து அப்புறப்படுத்தி அந்த இடத்தில் புதிய சத்திரசிசிச்சை கூடமொன்றையும் காவறைத்தொகுதி யொன்றையும் நிருமாணிக்க வேண்டியுள்ளதோடு, அதற்கான ஒப்பந்தத்தை அரச அபிவிருத்தி, நிருமாண கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளமை பற்றி சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |