• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாலியல் மற்றும் பால்சார் அடிப்படையிலான வன்முறையை குறைப்பதற்கான கொள்கைசார் கட்டமைப்பும் தேசிய செயற்பாட்டுத் திட்டமும்
- பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்காக புதிய சட்டங்களை வரைவதற்கும் அமுல்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. இதற்கமைவாக அரசாங்க நிறுவனங்கள், சருவதேச மற்றும் உள்நாட்டு அரசசார்பற்ற அமைப்புகள், சமூகம் சார்ந்த அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் உடன்பாட்டுடன் சிறுவர் அலுவல்கள், அனர்த்த முகாமைத்துவம், கல்வி, பொருளாதார அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு, வலுவூட்டல், நிவாரணம், சுகாதாரம், நீதி, சட்ட மறுசீரமைப்பு, ஊடகம் என ஒன்பது துறைகளின் கீழ் வரையப்பட்டுள்ள ஆண் பெண் பால்சார் அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான கொள்கை கட்டமைப்பும் செயற்பாட்டுத் திட்டமும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.