• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 மே மாதத்தில் நிகழ்ந்த வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் நிருமாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
- அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைவாக, அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் சுமார் 500 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதோடு, சுமார் 4,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. முழுமையாக அழிந்துள்ள வீடுகளை புதிதாக நிருமாணிப்பதற்கும் பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளை புனரமைப்பதற்கும் பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுத்தமைத்து அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களுக்கும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் கையளிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.