2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மத்திய மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு வேலைகளைப் பூர்த்தி செய்தல் - விளையாட்டுத்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியை திகன பிரதேசத்தில் நிருமாணிப்பதற்காக 212 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது 2011 ஆம் ஆண்டில் குறித்தொதுக்கப்பட்டுள்ளதோடு, அதன் அபிவிருத்தி பணிகள் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கட்டடத் தொகுதியின் பார்வையாளர்கூடத்தின் நிருமாணிப்பு பணிகள் மத்திய மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டதோடு, இந்த பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதன் காரணமாக விளையாட்டுக் கட்டடத் தொகுதியை திறந்து வைப்பதற்கு இயலாமற் போயுள்ளது. இதற்கமைவாக இந்த விளையாட்டுக் கட்டடத் தொகுதியை உடனடியாக பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இதன் பிரதான பார்வையாளர்கூடத்தின் அபிவிருத்திப் பணிகள், உட்பாதைகள், அழகுபடுத்தல் உட்பட ஏனைய மேலதிக வேலைகளை 97.86 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் செய்யும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|