2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மத்திய அதிவேக பாதை கருத்திட்டம் - கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரை (0.50 கிலோ மீற்றரிலிருந்து 4.54 கிலோ மீற்றர் வரையிலான பகுதி) நிருமாணிப்பதற்கான சிவில் ஒப்பந்த வேலைகளை கையளிப்பதற்கு அங்கீகாரம் கோரல் - மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் I பகுதி கொஸ்சின்னயிலிருந்து மீரிகம வரையும் II ஆம் பகுதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையும் III ஆம் பகுதியானது பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையும் நிருமாணிக்கப்படவுள்ளது. இதன் கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரையிலான (0.50 கிலோ மீற்றரிலிருந்து 4.54 கிலோ மீற்றர் வரை) பகுதியின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|