2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
"புபுதமு பொலன்நறுவ" அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை வசதிகளை மேம்படுத்துதல் - வடமத்திய மாகாணத்திற்குரிய பொலன்நறுவை மாவட்டத்தில் 241 பாடசாலைகள் உள்ளதோடு, இந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 83,551 ஆகும். கிராமிய குழந்தைகளின் விளையாட்டு திறமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் அடிப்படை நோக்கத்துடன் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் அபிவிருத்தி எண்ணக்கருவுக்கு அமைவாக "ரஜரட்ட நவோதய" கருத்திட்டத்தின் ஒரு கட்டமாக "புபுதமு பொலன்நறுவ" அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஹிங்குரக்கொட, தமன்கடுவ, திம்புலாகல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்தல், சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டு மைதானங்களையும் பார்வையாளர் கூடங்களையும் நிருமாணித்தல் அடங்கலாக இனங்காணப்பட்ட 13 அபிவிருத்தி கருத்திட்டங்களை 418 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |