2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை அரசாங்கத்துக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்தல் பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை - தேர்ச்சி சான்றிதழுடனான கப்பலோடி ஒருவருக்கு வெளிநாட்டு கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பலொன்றில் சேவையாற்றுவதற்கு இந்த தேர்ச்சி சான்றிதழுக்கு மேலதிகமாக உரிய கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தினால் வழங்கப்படும் இதற்கு சமமான சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொள்வது கட்டாயமானதாகும். அத்தகைய சம மட்டத்திலான சான்றிதழை வழங்குவதற்காக உரிய அரசாங்கங்களுக்கிடையில் இணக்கப்பாடு அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்திருக்க வேண்டுமென்பதோடு, ஏற்கனவே இலங்கை 30 நாடுகளுடன் இத்தகைய உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது. இந்த சான்றிதழ்களை வழங்குவது சம்பந்தமாக இலங்கையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, இதன் மூலம் இலங்கை கப்பலோடிகளுக்கு சுவிட்சர்லாந்து கொடியுடனான கப்பல்களில் சேவையாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதற்கமைவாக சுவிட்சர்லாந்துடன் சமுத்திர தேர்ச்சி சான்றிதழை ஏற்றுக் கொள்தல் சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்து கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |