2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அற்றோனித் தத்துவ கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் - காணி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏமாற்று வேலைகள் அதிகரித்து வருவது தற்போது மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்துவதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இத்தகைய ஏமாற்று வேலைகளை தடுக்கும் பொருட்டு நடைமுறையிலுள்ள அற்றோனித் தத்துவ கட்டளைச் சட்டத்திலும் நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்திலும் உள்ள உரிய ஏற்பாடுகளை திருத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, தற்போது நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டிலான பிரேரிப்புகள் வரையப்பட்டு வருகின்றது. அற்றோனித் தத்துவ கட்டளைச் சட்டத்திற்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்களை இனங்காணும் பொருட்டு நிபுணத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் அற்றோனித் தத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|