2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சாதாரண ஒப்பனைப் பொருட்களின் ஒழுங்குறுத்துகைக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல் - 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய ஔடதங்கள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் 1980 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஒப்பனைப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் மருந்துகள் சட்டம் நீக்கப்பட்டமையினால் சிகிச்சை ஒப்பனைப் பொருட்கள் அல்லாத சாதாரண ஒப்பனைப் பொருட்களை ஒழுங்குறுத்துவதற்கு சட்டம் வரையப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக சாதாரண ஒப்பனை வகைகள் சம்பந்தமாக உரிய ஒழுங்குறுத்துகை பணிகளை செய்வதற்குத் தேவையான சட்டங்களை ஆக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |