2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் இலங்கை அரசாங்கத்தினதும் நிதியங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் குடாநாட்டின் பெரும் பகுதியும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மற்றும் பளை அதிகார பிரதேசங்களும் தழுவப்படும். இது பிரதேசவாழ் மக்களுக்கு மிகச் சிறந்த நீர் விநியோகம் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிகள் வழங்கப்படுவதை குறியிலக்காகக் கொண்டுள்ளதோடு, இடம்பெயர்ந்த மக்கள் குறித்த பிரதேசங்களில் மீள குடியமர்வதனையும் யாழ்ப்பாணம் குடாநாட்டிற்குள் நீர் விநியோகத்தை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் கல்லுண்டாய், புங்குடுதீவு மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் மூன்று (03) நிலக்கீழ் தண்ணீர் தொட்டிகளை நிருமாணிப்பதற்கும் பளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நல்லூர் வரை பிரதான நீர் அனுப்பீட்டுக் குழாய்களை வழங்கி பதிப்பதற்கும் நல்லூர், மீசாலை ஆகிய பிரதேசங்களில் இரண்டு (02) நிலக்கீழ் தண்ணீர் தொட்டிகளை நிருமாணிப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|