• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இஸ்ரேலில் அங்கவீனமுற்றுள்ள வயோதிப தொழில் வழங்குநர்களைக் கவனிப்பதற்காக இலங்கையிலிருந்து 50 கவனிப்பாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் பணிக்கமர்த்துவதற்குமான கூட்டு முன்னோடி நிகழ்ச்சித்திட்டம்
- இஸ்ரேல் அரசாங்கமானது இஸ்ரேலில் அங்கவீனமுற்றுள்ள வயோதிபர்களைக் கவனிப்பதற்காக நாடொன்றிலிருந்து 50 கவனிப்பாளர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டிலான நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கமைவாக இஸ்ரேலில் கவனிப்பாளர்களாக தற்காலிக அடிப்படையில் சேவையாற்ற விரும்பும் 50 இலங்கையர்களை தனியார் தொழில் முகவர் நிறுவனங்களின் தலையீடின்றி நியாயமான, வௌித்தெரியும் மற்றும் குறைந்த செலவு வழிமுறையொன்றின் கீழ் தெரிவு செய்து சேவையில் ஈடுபடுத்துவதற்காக இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூட்டு முன்னோடி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.