• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல்
- சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினால் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு காரணமாய் அமையும் விடயங்களை இனங்காண்பதற்கும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடுவதற்கும் கூட்டு முயற்சிகளை எடுக்கும் முக்கியத்துவத்தை இனங்காண்பதற்கும் இதற்காக செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு உரிய தரப்பினர்களின் கருத்துகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.