• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"தேசிய சிறுவர் பராயப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி வாரம்" நடாத்தப்படும் திகதிகளை திருத்துதல்
- குழந்தையின் அபிவிருத்திக்கு தாக்கத்தைச் செலுத்தும் காரணிகள் நாளையல்ல இன்றே குழந்தைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உரிய தரப்பினர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டு திசெம்பர் 14 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை "தேசிய சிறுவர் பராயப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி வாரம்" செயற்படுத்தப்பட்டது. இந்த வாரமானது அரசாங்கத்தின் நிதி ஆண்டு முடிவடையும் காலப்பகுதியில் உள்ளமையினால், இதற்குரிய நிகழ்ச்சித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, இதற்கு மாற்று வழியாக "தேசிய சிறுவர் பராயப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி வாரம்" நடைமுறைப்படுத்தும் கால எல்லையை ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரையாக திருத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.