• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைத்தல் சம்பந்தமாக இலங்கை மற்றும் யுக்ரேன் அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தின் மூலம் இலங்கை நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேறு நாடொன்றின் பிரசையொருவருக்கு குறித்த தண்டனையை அந்த நபர் பிரசையாக கருதப்படும் நாட்டிலேயே அனுபவிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த நாட்டிற்கு ஒப்படைப்பதற்கும் வேறு நாடொன்றில் சிறைத்தண்டனைக்கு ஆட்படுத்தப்பட்ட இலங்கை பிரசைக்கு குறித்த தண்டனையின் மீதி பகுதியை இலங்கையில் அனுபவிப்பதற்கு ஒப்படைக்கும் பொருட்டிலுமான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கமைவாக, குற்றம் விதிக்கப்பட்ட ஆட்களை ஒப்படைப்பது சம்பந்தமாக இலங்கைக்கும் யுக்ரேனுக்கும் இடையில் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.