• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலருஸ் குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் இரு தரப்பு உடன்படிக்கை
- 2000 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க சிவில் மற்றும் வர்த்தக விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கும் சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் நீதிமன்ற ஆவணங்களை கையளித்தல் மற்றும் சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளும் போது ஒத்துழைப்பு நல்குதல் சம்பந்தமாக வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஆவணங்களைப் பரிமாறிக் கொள்ளல் மற்றும் ஒப்படைத்தல், சாட்சிகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற விடயநோக்கங்களுக்குள் விரிவுபடுத்தும் விதத்தில் சிவில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் போது ஒவ்வொரு தரப்புக்கும் பரஸ்பர ஒத்துழைப்பினைத் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் இருதரப்பு உடன்படிக்கையொன்றை பெலருஸ் குடியரசுடன் செய்து கொள்ளும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.