• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறப்பர், தெங்குத்துறை மற்றும் இதுசார்ந்த கைத்தொழில் தொடர்பில் சர்வதேச கண்காட்சியொன்றை இலங்கையில் நடாத்துதல்
- தற்போது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, இந்தோனேஷியா, வியட்நாம், யப்பான் போன்ற நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருந்தோட்டத்துறை சம்பந்தமான சருவதேச கண்காட்சிகள் நடாத்தப்படுவதோடு, இலங்கையின் பல்வேறுபட்ட நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், உற்பத்திகளை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் இத்தகைய கண்காட்சியொன்று இலங்கையில் நடாத்துவதன் மூலம் சருவதேசத்துடன் இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு கிடைப்பதோடு, வெளிநாட்டு உற்பத்தியாளர்களினதும் விற்பனையாளர்களினதும் தேவைகளை இனங்காண்பதற்கும் புதிய தொழினுட்பம் மற்றும் வசதிகளுடன் இணைவதற்கும் அதன் மூலம் உள்நாட்டு உற்பத்திகளின் தரத்தையும் தனித்தன்மையையும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு உருவாகின்றது. இலங்கை தேயிலை கைத்தொழிலுக்கு 150 ஆண்டுகள் பூர்த்தியாவதன் மேல் 2017 ஆகஸ்ட் மாதத்தில் "சிலோன் ரீ எக்ஸ்போ" என்னும் பெயரில் கண்காட்சியொன்று நடாத்தப்படவுள்ளதோடு, இந்த கண்காட்சிக்கு பயன்படுத்தப்படும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி 2017 ஆகஸ்ட் மாதத்தில் தெங்கு மற்றும் இறப்பர் துறைகளை முன்னிலைப்படுத்தி சருவதேச கண்காட்சியொன்றை கொழும்பில் நடாத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.