• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெத்தட்ட அருண பொஹர திரிய” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய உரம் பெறும் விவசாயிகளுக்காக வழங்கப்படும் பயிர் காப்புறுதித் திட்டம்
- முன்னர் நடைமுறையிலிருந்த உரமானிய திட்டத்தின் கீழ் போகமொன்றின் போது 50 கிலோகிராம் கொண்ட மானிய உர பொதியொன்றுக்கு 150/- ரூபா வீதம் அறிவிடப்பட்டு கட்டாய பங்களிப்பு பயிர் காப்புறுதித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆயினும் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக உரமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு பணம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளமையினால், உரிய காப்புறுதி தவணை நிதியத்தை விவசாயிகளிடமிருந்து அறவிடுவதற்குப் பதிலாக வங்கி, நிதி, மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் வருடாந்த இலாபத்திலிருந்து ஒரு சதவீத்தினைப் பெற்று பயிர்களின் சேதத்திற்காக வழங்கும் பொருட்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிறுவனத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள நிதியத்திலிருந்து வகிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.