• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவள அபிவிருத்தி புலமை பரிசிலுக்கான யப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் - 2016
- இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளராகிய யப்பான் அரசாங்கமானது கடந்த பல தசாப்தகாலமாக அதன் மரபுவழி நன்கொடை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக தொழினுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு கணிசமான அளவு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் அரசாங்க துறைசார்ந்த நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கு யப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்கும் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு யப்பான் அரசாங்கத்தினால் இலங்கை சார்பாக 2010 ஆம் ஆண்டில் மனிதவள அபிவிருத்தி புலமைப் பரிசிலுக்கான யாப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது பணிக்கட்டமைப்பின் மூன்றாவது குழுவாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் 2016 செப்ரெம்பர் மாதத்தில் அவர்களுடைய கல்வி நடவடிக் கைகளை ஆரம்பிக்கவுள்ளார்கள் என்பதோடு, இந்த உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு சார்பில் 231 மில்லியன் யப்பான் யென்களைக் கொண்ட நன்கொடையொன்றை (அண்ணளவாக 318 மில்லியன் ரூபா) யப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக இந்த நன்கொடைக்குரிய பரிமாற்றல் கடிதங்களை யப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்கும் இந்த நன்கொடைகளை பெற்றுக் கொள்வதன் சார்பில் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.