• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறப்பர் ஏற்றுமதி செய்யும் போது அறவிடப்படும் செஸ் வரியை திருத்துதல்
- இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பரை உள்நாட்டில் பெறுமதிசேர்க்கப்படும் கைத்தொழில்களினால் பயன்படுத்துவதனை ஊக்குவிப்பதற்காக பச்சை இறப்பராக ஏற்றுமதி செய்யப்படும் இறப்பர் கிலோ ஒன்றுக்கு சுமார் 15/- ரூபா செஸ் வரி அறவிடப்படுகின்றது. தற்போது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இறப்பரில் 80 சதவீதம் உள்ளூர் கைத்தொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுவதோடு, சுமார் 20 சதவீதம் பச்சை இறப்பராக ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலக வர்த்தக சந்தையில் இறப்பர் விலை குறைவடைவதற்கு ஒருங்கிணைவாக இலங்கையிலும் இறப்பர் விலை குறைவடைந்ததன் காரணமாக சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் அடங்கலாக பயிர்ச்செய்கையாளர்கள் தற்போது கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதோடு, தற்போது நிலவும் குறைந்த விலை 2020 ஆம் ஆண்டுவரை இருக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் இறப்பர் ஏற்றுமதியாளர்களுக்கும் உள்ளூர் இறப்பர் பொருள் உற்பத்தியாளர்களுக்கு மிடையில் இயற்கை பச்சை இறப்பருக்காக போட்டிகரமான நிலையினை உருவாக்குவதன் மூலம் இறப்பர் விலையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் இறப்பர் செய்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் நோக்கில் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் பச்சை இறப்பர் ஏற்றுமதியின் போது அறவிடப்படும் செஸ் வரியை கிலோ ஒன்றுக்கு 15/- ரூபாவிலிருந்து 4/- ரூபாவாக குறைக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.