• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையை அதிகரிப்பதற்காக தண்டனைச் சட்டக் கோவையை திருத்துதல்
- எட்டு வயதுக்கு குறைந்த சிறுவர் ஒருவர் செய்யும் எதுவும் குற்றம் ஒன்றாக கருதப்படமாட்டாதென இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், சருவதேச ரீதியில் நிலவும் அங்கீகாரத்திற்கு அமைவாக குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் வயதெல்லையானது 12 இலிருந்து 14 ஆக மாறியுள்ளது. இலங்கையில் நடைமுறையிலுள்ள குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையான எட்டு வயது என்பது மிகவும் குறைந்த வயதெல்லையென மனநிலை மருத்துவர்களினதும் உரிய துறைகளின் நிபுணர்களினதும் கருத்தாகும். இதற்கமைவாக 12 வயதிற்கு குறைந்த சிறுவர் ஒருவரினால் குற்றமொன்று புரியப்பட்டவிடத்து, குறித்த குற்றத்திற்காக குற்றம் புரிந்த சிறுவருக்கு தண்டனை வழங்கக்கூடாதெனவும் 12 வயதுக்கு மேற்பட்ட இருப்பினும் 14 வயதிற்கு குறைந்த சிறுவர் ஒருவர் சம்பந்தமானவிடத்து குற்றஞ் சாட்டப்பட்டுள்ள குற்றத்தினை புரிவதற்காக எண்ணுவதற்கு போதுமான அறிவு உரிய சிறுவருக்கு உள்ளதென நீதவானின் கருத்தாகவிருக்கும் இடத்து அந்த குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு இயலுமாகும் வகையிலும் தண்டனைச்சட்ட கோவையைத் திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.