• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சருவதேச சமய மாநாடுகளை ஏற்பாடு செய்தல்
- தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா என்பன பல்மத மற்றும் பல் இன மக்களின் வாசஸ்தலமாக உள்ள வலயமொன்றாவதோடு, தற்போது கடும்போக்காளர்களின் செயற்பாடுகளினால் இந்த வலயத்தில் சமாதானம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இந்தப் பின்னணியில் பிற கலாசாரங்கள் மற்றும் மதங்கள் சம்பந்தமாக சகிப்புத் தன்மையுள்ள பின்னணியொன்றை உருவாக்குவதற்கும் பலப்படுத்துவதற்குமாக பல்வேறுபட்ட மதங்களுக்கிடையில் ஆழமான கலந்துரையாடல்களை ஆரம்பித்து, நிலையாக பேணும் தேவை கடுமையாக எழுந்துள்ளது. இதற்கமைவாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதும் புத்தசாசன அமைச்சினதும் மேற்பார்வையின் கீழ் சருவதேச தேரவாத பௌத்த மாநாடொன்றை 2018 ஆம் ஆண்டிலே இலங்கையில் நடாத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சினதும் மேற்பார்வையின் கீழ் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இஸ்லாம் மார்க்கம் மற்றும் சனநாயகம் பற்றிய சருவதேச மாநாட்டினை 2016 நவெம்பர் மாதம் 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.