• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம் தெற்கு கட்டம் II - ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம்
- நாச்சதூவ, தலாவ, ரம்பாவ, மிஹிந்தலை, திறப்பனை சிறிய நகரம், அநுராதபுர நகரசபையில் உள்ள சில பிரதேசங்கள், நுவரகம் பலாத்த, மத்திய மற்றும் நுகரகம் பலாத்த கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தழுவி நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள அநுராதபுதம் தெற்கு கட்டம் II - ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் சுமார் 280,956 பேர்களுக்கு நலன் கிடைக்கப் பெறும். இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.