2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
10 மெகாவோட் ஆற்றலைக் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையமொன்றை வவுனியா பிரதேசத்தில் தாபித்தல் - அதிகரித்து வரும் மின்சார கேள்விக்கு முகம்கொடுப்பதற்காக மீள் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை அபிவிருத்தி செய்வது அத்தியாவசி யமானதாகும். M/s Vydexa (Lanka) Power Corporation (Pvt) Ltd நிறுவனத்தினால் சுமார் 14.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் 10 மெகாவோட் ஆற்றலைக் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்திக் கருத்திட்டமொன்றை வவுனியா பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளதோடு, இதன்மூலம் வருடாந்தம் 19 மணித்தியால கிகாவெட் ஆற்றலினை தேசிய மின்சார முறைமைக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வவுனியா, நெடுங்குளம், காத்தார் சின்னக்குளம் பிரதேசத்திலுள்ள சுமார் 22 ஹெக்டயார் விஸ்தீரணம் கொண்ட காணியை இந்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு அளிப்பதற்காக குறித்த காணியை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை முதலீட்டுச் சபைக்கு இறையிலிக் கொடையொன்றாக கையளிக்கும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |