• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
- இலங்கையில் சிவில் விமான சேவைகள் வசதிகளை விருத்தி செய்யும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வர்த்தக பிரயாணிகள் சேவைகளுக்கான செயற்பாட்டினை ஆரம்பிக்கக்கூடிய விதத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக விமான நிலைய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும், விமான ஓடுபாதை மற்றும் விமான நிறுத்தும் இடத்தை பழுதுபார்ப்பதற்கும் அமைச்சரவையினால் 2015 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, இந்த வேலைகளின் சுமார் 80 சதவீதம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மீதி வேலைகளை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் ஊடாக செய்து கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.