• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனித உரிமைகள் பற்றிய அமைச்சர்கள் மட்டத்திலான குழு
- இலங்கை மக்களின் மனித உரிமைகளை மதித்து, மேம்படுத்தி பாதுகாப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். இலங்கை அரசாங்கத்தினால் சுயமாக செய்து கொள்ளப்பட்டுள்ள சருவதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் தேசிய நல்லிணக்க செயற்பாட்டினையும் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் பலப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது தேவையானதென்பதோடு, இதனால் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பின்னணியும் உருவாகின்றது. 2012-2016 கால எல்லைக்குள் நடைமுறைபடுத்தப்பட்ட "தேசிய ஐந்து வருட மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம்" இந்த ஆண்டுடன் பூர்த்தியாவதோடு, எதிர்வரும் ஐந்து வருடங்கள், அதாவது 2017-2021 வரையிலான கால எல்லைக்குள் "மனித உரிமைகள் தேசிய செயற்பாட்டுத் திட்டம்" ஒன்றை வகுத்தமைப்பதற்கும் மனித உரிமைகள் தொடர்பிலான சகல விடயங்கள் பற்றியும் பரிசீலனை செய்யும் பொருட்டும் அமைச்சர்களுக்கிடையிலான குழுவொன்றை நியமிக்கும் பொருட்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.