• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் கருமங்களின்போது பரஸ்பர சட்டரீதியில் உதவியளித்தல் தொடர்பாக யுக்ரேன் மற்றும் இலங்கைக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கை
- குற்றவியல் தொடர்பிலான விடயங்களின் போது சருவதேச சட்ட ஒத்துழைப்புகளை தெரிவிப்பது இத்தகைய குற்றங்களை தடுப்பது மிகமுக்கியமானதாகும். வேறு நாடுகளில் நிகழும் குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக இலங்கையின் ஒத்துழைப்பினை அந்த நாடுகளுக்கு தெரிவிப்பதற்கும் அந்த நாடுகளின் ஒத்துழைப்பினை இலங்கைக்காக பெற்றுக் கொள்வதற்கும் வெ ளிநாட்டு நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் கருமங்களின்போது பரஸ்பர ஒத்துழைப்பினைத் தெரிவித்தல் தொடர்பிலான சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, புலனாய்வுகளை மேற்கொள்தல், வழக்கு தொடுத்தல், குற்றங்களை தடுத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் மூலம் ஈட்டும் பணங்களை அரசுடமையாக்குதல் போன்ற விடயங்களின் போது இருதரப்பிலும் அமுலில் உள்ள சட்டங்களை பலப்படுத்தும் நோக்கில் குற்றவியல் காரணங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பினை தெரிவித்தல் தொடர்பில் இலங்கைக்கும் யுக்ரேனுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.