2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தறை கட்டம் IV - நீர்வழங்கல் கருத்திட்டம் - மாத்தறை மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் 231 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில் மாத்தறை கட்டம் IV - நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவசரத் தேவையையும் முக்கியத்துவத்தையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடன் திட்டத்தின் கீழ் இந்த கருத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தமானது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |