• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்குப் புகையிரதப் பாதையின் பொல்கஹவலைக்கும் குருநாகலுக்கும் இடையில் இரட்டைப் புகையிரதப் பாதையை நிருமாணித்தல்
- இந்தியக் கடன் உதவித்திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத பாதைகளை புனரமைக்கும் பணிகள் தற்போது கணிசமான மட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, இந்த நோக்கம் முடிவடைந்ததன் பின்னர், எஞ்சும் என கணக்கிடப்பட்டுள்ள 30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொகையை வடக்கு புகையிரதப் பாதையின் புகையிரத போக்குவரத்துக்காக செலவழியும் காலத்தை குறைக்கும் நோக்கில் பொல்கஹவலைக்கும் குருநாகலுக்கும் இடையில் விருத்தி செய்யப்பட்ட சைகை முறைமையுடன் தற்போதுள்ள புகையிரதப் பாதைக்கு ஒருங்கிணைவாக மேலதிக புகையிரதப் பாதையொன்றை இடுவதற்காக பயன்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.