• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் போர்த்துக்கல் அரசாங்கத்திற்கும் இடையில் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- தேர்ச்சி சான்றிதழுடனான கப்பலோடி ஒருவருக்கு வெளிநாட்டு கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கப்பலொன்றில் சேவையாற்றுவதற்காக இந்த தேர்ச்சி சான்றிதழுக்கு மேலதிகமாக உரிய கப்பலை பதிவுசெய்துள்ள அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதற்குச் சமமான நிலையிலான சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இத்தகைய சமமான நிலையிலான சான்றிதழ்களை வழங்குவதற்கு இயைபுள்ள அரசாங்கங்களுக்கிடையில் இணக்கப்பாடு அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டிருத்தல் வேண்டுமென்பதோடு, ஏற்கனவே இலங்கை 29 வெளிநாடுகளுடன் இத்தகைய உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளது. இத்தகை உடன்படிக்கைகளை செய்து கொள்வதன் மூலம் தேர்ச்சி சான்றிழைப் பெற்றுக் கொண்ட இலங்கை கப்பலோடிகள் பெரும்பாலானோருக்கு வெளிநாட்டுக் கப்பல்களில் சேவையாற்றும் வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் வழங்குவது சம்பந்தமாக இலங்கையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு போர்த்துக்கல் அரசாங்கம் விருப்பினைத் தெரிவித்துள்ளதோடு, இதற்கமைவாக போர்த்துக்கலுடன் சமுத்திர தேர்ச்சி சான்றிதழ்களை ஏற்றுக் கொள்தல் சம்பந்தமாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.