• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புடவை சார்ந்த சிறிய அளவிலான தொழிற்சாலைகள் ஊடாக பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துதல்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் சருவதேச சந்தையில் நுழைவதை ஊக்குவிப்பதற்கும் கிராமிய பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிராமிய பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் போது இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் யுத்தத்தினால் விதவைகளான பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கி வெ ளித்தெரியும் வழிமுறையொன்றின் மூலம் தெரிவுசெய்யப்படும் கிராமிய பெண்களுக்கு இலங்கை புடவைக் கைத்தொழில் மற்றும் ஆடை நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டமொன்றின் கீழ் ஆடை தைத்தல் தொடர்பிலான பயிற்சியாளர்களினால் ஆடைகள் தைத்தல் தொடர்பிலான பயிற்சி வழங்கப்படுவதோடு, தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் பயிற்சியானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றினால் வழங்கப்படும். அதேபோன்று தேசிய வடிவமைப்பு நிலையம் மற்றும் தேசிய கைப்பணிச்சபை ஆகியவற்றினால் தேவையான வடடிவமைப்பு மற்றும் பயிற்சி வழங்கப்படும். அதேபோன்று உற்பத்தி செய்யப்படும் புடவைகளை விற்பனை செய்யும் பணிகள் தேசிய மட்ட வாங்குநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பிராந்தி்ய மட்டத்துடன் தொடர்புபடுத்தி மேற்கொள்ளப்படும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் அடங்கலாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் இனங்காணப்பட்ட பிரதேசங்களிலே இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பயிற்சிகளை பூர்த்தி செய்யும் பெண்களை இணைத்துக் கொண்டு முதல் கட்டமாக 2016 ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை / கூட்டுத் தொழில்முயற்சிகள் வடிவில் 150 சிறிய புடவைக் கைத்தொழில்சாலைகளைத் தாபிப்பதற்கும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.