2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புகையிரத பிரயாண சீட்டுக்களுடன் தொடர்புபட்ட குற்றங்களுக்கான தண்டப் பணத்தைத் திருத்துதல் - ஏனைய பயணிகள் போக்குவரத்து சேவைகளுடன் ஒப்பிடும் போது புகையிரத சேவை மிக சலுகை கட்டண முறையில் நடைமுறைப்படுத்துகின்ற போதிலும் சில புகையிரதப் பயணிகள் பிரயாணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளாது அல்லது தங்களுடைய பயணச் சீட்டிற்கு உரியதாகாத உயர் வகுப்பிற்குரிய புகையிரத பெட்டிகளில் பிரயாணம் செய்வது பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளது. பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான புகையிரத சேவையொன்றை வழங்கும், புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை விருத்தி செய்து கொள்ளும், பிரயாணச் சீட்டுகள் இல்லாது புகையிரதத்தில் பயணிக்கும் பிரயாணிகளை அதைரியப்படுத்தும் நோக்கில் புகையிரத பிரயாணச் சீட்டுக்கள் தொடர்புபட்ட குற்றங்கள் சம்பந்தமாக விதிக்கப்படும் தண்டப்பணத்தை திருத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள 1,500/- ரூபா உச்சமான தண்டத் தொகையை 3,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |