2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை மேம்படுத்துவதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் வழங்கப்படும் கொடை - கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக்கு கடற்கரைகளில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை தொடர்ந்தும் விரிவுபடுத்துவதன் மூலம் திணைக்களத்தின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 30 மீற்றர் நீளமான இரண்டு கண்காணிப்பு படகுகளை வழங்குவது அடங்கலாக தேவையான பிற உதவிகளை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கும் பொருட்டு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்காக யப்பான் யென் 1,830,000,000 யென் கொண்ட (அண்ணளவாக 2,400 மில்லியன் ரூபா) கொடையொன்றை பெற்றுக் கொள்வதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் கொடை உதவி உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |